Ananatham

வாலிகண்டாபுரம்

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்-வாலிகண்டாபுரம்

கி.பி. 10ம் நூற்றாண்டில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பராந்தக சோழனால் தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் கலைநயமிக்க சிற்பிகளால் பார்த்துப்பார்த்து அழகுற கட்டப்பட்ட சிறப்பு பெருமை பெற்றது இத்திருக்கோயில். திரேதா யுகத்தில் கிஷ்கிந்தை நாட்டின் அரசன் வாலியே வந்து இங்குள்ள சுயம்பு ஈஸ்வரரை வணங்கித்தான் எதிரியின் பலத்தில் பாதி பெற்றதும் / வாலியை இராமன் மறைந்து இருந்து அம்பெய்து கொன்ற இடம் இது என்றும் ஆதலால் இங்குள்ள ஈஸ்வரர் வாலீஸ்வரர் என்றும் ஊருக்கு வாலிகண்டாபுரம் என்றும் அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். இது பெரம்பலூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியதுவமான திருக்கோயில் ஆகும்.